முதல் முறையாக தன்னுடைய கைக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி

3 years ago 236

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீதேவி அசோக்குமார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடிகையாக வலம் வரும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் அசோக் என்ற புகைப்பட கலைஞரை திருமணம் செய்து கொண்டார். 


இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீதேவி அசோக் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது அவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியாக புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை செம அழகாக இருக்கிறது என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.