நயன்தாரா நடிக்கும் புதிய த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது

3 years ago 207

நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நயன்தாரா அதிகமாக நடிக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் நெற்றிக்கண் திரைப்படமும் அவ்வாறான ஒன்று.

அத்துடன் ரஜினியுடன் அவர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

இந்தநிலையில், புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். இதனை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். 

இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.