நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகர்

3 years ago 366

தமிழகத்தில் ஆடி மாதத்தில் தெருக்கூத்து கிராமப்புரங்களில் அதிகம் நடக்கும். வேலூரில் உள்ள அனைக்கட்டு என்ற இடத்தில் எப்போதும் தெருக்கூத்து நடப்பது வழக்கம்.

அந்த கூத்தில் கமலநாதன் என்பவர் பல வருடங்களாக வேடம் போட்டு நடித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் கூத்தில் நடித்துக் கொண்டிருக்க திடீரென மண்ணில் சாய்ந்திருக்கிறார்.

பின் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிவந்துள்ளது. அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இறந்த வீடியோவை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.