சில்க் ஸ்மிதாவை பாலு மகேந்திரா அத்துமீறி பயன்படுத்திக்கொண்டாரா? உண்மையை உடைத்த பிரபல நடிகர்

4 years ago 283

80, 90களில் வண்டிச்சக்கரம் படத்தில் ஆரம்பித்து திரும்பி பார் படம் வரை தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புகழ் பெற்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. 

முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்தும் முன்னணி நடிகர்கள் படத்தில் தாராளம் காட்டி நடித்து பெரிய இடத்தினை பிடித்தார்.

சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். 1996ல் திடீரென தற்கொலை செய்து மரணமடைந்தார் சில்க் ஸ்மிதா.

அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல அனுபவங்களை பலர் கூறி வந்த நிலையில், போதையில் தான் படத்தின் சூட்டிங்கிற்கு வருவார் என்று பிரபல பத்திரிக்கையாளும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

மேலும், நடிகை சில்க் ஸ்மிதாவை அத்துமீறி அதாவது கவர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டவர் பாலு மகேந்திரா. பொன்மேணி உருகுதே படத்திற்கு பின் தான் க்ளாமரில் எல்லைமீறி நடித்தார். எந்த ஆடை கொடுத்தாலும் அதை மாட்டிக்கொண்டு நடிக்கும் நடிகை தான் சில்க் ஸ்மிதா என்று கூறியுள்ளார்.