தனது காதலனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சீரியல் நடிகை.. வைரலாகும் போட்டோ..

3 years ago 638

ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்ப்கி கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிட்டது.

ஏற்கனவே சீரியலில் பரிட்சயமான சில முகங்கள் இருந்தாலும் பலரும் சீரியல்களுக்கு புதுமுகங்கள்தான். நாளுக்குநாள் விறுவிறுப்புடன் நகரும் இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிவிழா வரை கொண்டாடப்பட்டது.


இந்த சீரியலில் பார்வதியாக வரும் நடிகை ஷபானவிர்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். கார்த்தி மற்றும் ஷபான இருவரும் வரும் காதல் காட்சிகளை இந்த இளசுகள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் ஷபானா, ஆர்யன் என்பவரை காதலிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். அவரும் விஜய்யில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது பல வருட காதலுக்கு பிறகு முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஷபானா. அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.