2ஆவது குழந்தை பிறக்கவுள்ள அறிவிப்பை வெளியிட்ட நடிகை! குவியும் வாழ்த்துக்கள்

3 years ago 640

கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் இதயத்திருடன், திமிரு, மொழி, ராஜாதி ராஜா உள்பட பல திரைப்படங்களிலும், மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.


இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நீலிமாராணி தனது திருமண நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்து தற்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் 20 வாரங்கள் ஆகிவிட்டது என்றும் வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்றும் ஜனவரியில் நாங்கள் நால்வராவோம் என்றும் அறிவித்துள்ளார். 


இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

செய்திகள், வீடியோக்கள் பார்க்க அப்பப்போ சினிமா Youtube-ல் Subscribe பண்ணுங்க.